அரசியல்

Saturday, April 1, 2017

பச்சை அயோக்கியத்தனத்தை பாண்டேத்தனம் என்று சொல்லலாம்!



இந்துத்வாவில் ஊறியவர். தினமலரில் முளைத்தவர். பச்சை ஆரிய பார்ப்பன ஆதிக்கப் பேர்வழி. நயவஞ்சகச் சிரிப்பில் நல்லவர்போல் நடிப்பவர்! எத்தனைமுறை சுட்டிக்காட்டினாலும் சூடுசொரனையே இருக்காது!

தனது இந்துத்வா, பி.ஜே.பி. ஆதரவை எப்பாடுபட்டாயினும் சன்னமாய் நுழைக்கத் துடிப்பவர். நேர்காணலில் செய்கிற தில்லுமுல்லு போதாது என்று, பட்டிமன்றம் வேறு நடுத்துகிறார். தன்னைத் தலைமைப் பொறுப்பில் தானே அமர்த்திக் கொள்கிறார்.

சாதியைப் பற்றி பட்டிமன்றம் நடத்தினால், “சாதி இருக்கட்டும். இருந்துவிட்டுப் போகட்டும்’’ என்பார். ஏதோ இவர் கையிலே எல்லாம் மாட்டிக்கொண்டது போல.

நேர்மையாகப் பேசுவதுபோல காட்டிக்கொண்டு, தன் இந்துத்வா நிலைப்பாட்டை நிறுவுவார்.

தி.மு.க.வுக்கு எதிராக எப்படியெல்லாம் கருத்தைத் திணிக்க முடியுமோ அப்படித் திணிப்பார்.

காரணம், ஆரிய பார்ப்பனர்களுக்கு நன்றாகத் தெரியும். தி.மு.க. தான் உண்மையான திராவிட அரசியல் கட்சியென்பது. ஓ.பன்னீர்செல்வமோ பி.ஜே.பி பினாமி. தினகரனோ அரசியல் ஆதாயத்திற்காக எதையும் செய்வார். இப்படிப்பட்ட தமிழக அரசியல் சூழலில் ஆரிய பார்ப்பனர்கள், அவர்களின் அடிவருடிகளின் தேர்வு ஓ.பன்னீர்செல்வம். எனவேதான், பாண்டே முதல், குமுதம், தினமணி, தினமலர் வரை எல்லோரும் பன்னீர்செல்வத்தை மக்கள் விரும்பும் மாபெரும் தலைவராக தூக்கி நிறுத்திக் காட்டுகின்றனர்.
இதற்குச் சரியான எடுத்துக்காட்டு, தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு (திணிப்பு). ஆர்.கே.நகரில் தேர்தல் நடக்கிறது. ஆனால், தந்தி டி.வி. பாண்டே அடுத்த முதல்வர் யார்? என்று கருத்துக் கணிப்பு நடத்துகிறார்.

ஆர்.கே.நகரில் கருத்துக் கணிப்பு நடத்தினால் தி.மு.க. வெல்லும் என்று அது சொல்லும். எனவே, அதை மறைக்க அடுத்த முதல்வர் யார் என்று கருத்துக் கணிப்பு. எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் பாருங்கள்!

இந்த ஆட்சிக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ள நிலையில் இந்தக் கருத்துக் கணிப்பு அயோக்கியத்தனமானது அல்லவா?

இந்தக் கருத்துக் கணிப்பின் நோக்கம் என்ன?
ஓ.பன்னீர்செல்வத்திற்கு தமிழகத்தில் பெரும் செல்வாக்கு உள்ளது என்ற கருத்தைத் திணித்து, அதன் மூலம் ஸ்டாலின் செல்வாக்கைக் குறைத்துக் காட்டி மக்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு பெரிய மாய தோற்றத்தை உருவாக்கிக் காட்டுவது.

ஓ.பன்னீர்செல்வம் என்ன உத்தமரா? ஊழலின் மொத்த வடிவமான ஜெயலலிதாவின் பினாமிதானே அவர்? எல்லா ஊழல்களுக்கும் கொள்ளைகளுக்கும் அவரும் உடந்தைதானே? அப்படியிருக்க பன்னீர்செல்வத்தை எப்படி மக்கள் ஆதரிப்பர்? பி.ஜே.பி.யை பெரிதாகக் காட்ட முடியாது. அதனால் பி.ஜே.பி. பினாமியைப் பெரிதாகக் காட்டுகிறார்கள்!

பாண்டே முதல் குழுதம் வரை அனைத்து அயோக்கிய சிகாமணிகளுக்கும் சொல்லிக் கொள்வது இதுதான்.

நீங்கள் என்ன தகிடுதத்தம் போட்டாலும், தமிழக மக்களும் இளைஞர்களும் மதவாத ஆரிய பார்ப்பன ஆதிக்கம் தமிழகத்தில் வர அனுமதிக்க மாட்டார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.தான் வெல்லும். மு.க.ஸ்டாலின் அவர்களின் நேர்மையான ஆட்சித் திறத்தை எதிர்காலம் சொல்லும்.

பாண்டேக்களின் நரித்தனங்கள் நகைப்பிற்குரியனவே தவிர, அவர்களுக்கு நன்மை தருவன அல்ல! தமிழர்கள் விழிப்போடுதான் இருக்கிறார்கள். பாண்டேக்கள் பரணையேறும் காலம் பக்கத்தில்தான் உள்ளது!

«««

No comments:

Post a Comment