அரசியல்

Friday, October 7, 2016

சுப்ரமணியசாமி வடிவில் ஆரிய பார்ப்பன அயோக்கியத்தனம் பாரீர்!

சுப்ரமணியசாமி வடிவில் 
ஆரிய பார்ப்பன அயோக்கியத்தனம் பாரீர்!..................

செல்வி செயலலிதா மருத்துவமனையில் உள்ளார். அரசு நிர்வாகம் நடந்து கொண்டுதானிருக்கிறது! அவரைப் பற்றிய உண்மை நிலையைக் கூறி, அரசு நிர்வாகத்தில் தொய்விருந்தால் அதை சரிய செய்ய வேண்டும். அல்லது புதிய முதல்வரைத் தேர்வு செய்ய கேட்க வேண்டும். இப்படித்தான் நியாயமான மனிதர்கள் கேட்பார்கள்.
ஆனால், ஆரிய பார்ப்பன சுப்பிரமணியசாமிக்கு முதல்வர் உடல்நிலைப் பற்றி கவலையில்லை.
தமிழ்நாட்டு மக்களைப் பற்றிக் கவலையில்லை. ஆரிய பூணூல் ஆதிக்கத்தை எப்படியாவது கொண்டுவந்து அவசரகால நிலையைப்போல ஆட்சி செய்ய வேண்டும் என்று அரிப்பெடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தலைமைச் செயலரைக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டுமாம்.
தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ். தீவிரவாத அமைப்பு தென்மாவட்டங்களில் வந்துவிட்டதாம். திராவிடர் கழகம், விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் போன்றவ்ற்றின் கூட்டில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாம்.
எப்படிங்க!
ஐஎஸ்ஐஎஸ். தீவிரவாதம் கேரளாவில் பரவி உள்ளது என்பதுதான் அண்மைச் செய்தி. ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டுமென்றால், கேரளாவில் கொண்டு வர வேண்டும்! ஆனால், அங்கு கொண்டுவரச் சொல்லி இந்த ஆள் கேட்கவில்லை!
மத்திய புலனாய்வுத் துறை தமிழகத்தில் 11 பேரை விசாரணை செய்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பேர் ஐஎஸ் இயக்க செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
ஐஎஸ் ஆதரவாளர் என்பதால் அவர்களை கைது செய்ய முடியாது என்று கூறியுள்ளது. உண்மை இப்படியிருக்க இல்லாத ஒன்றுக்கு, தொண்டு இயக்கமான திராவிடர் கழகத்தைத் தொடர்புபடுத்தி பழி தீர்க்கத் துடிப்பது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?
உச்சநீதி மன்ற உத்தரவை மதிக்காது நடக்கும் கர்நாடக ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்! என்று இந்த ஆள் கூறவில்லை.
மாறாக, முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்கு குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும் என்பதைவிட கோமாளித்தனம், பைத்தியக்காரத்தனம் வேறு இருக்க முடியுமா? இதைவிட அநியாய கோரிக்கைதான் இருக்க முடியுமா?
திராவிடர் கழகம் என்றைக்கு வன்முறையில் ஈடுபட்டது? ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து, சூத்திர மக்களை சுயமரியாதைக் கொள்ளச் செய்த இயக்கத்தின் மீது எந்த அளவிற்கு இந்தக் கும்பலுக்கு ஆத்திரம், வேகம் இருந்தால் இப்படி வெளிப்பட்டிருக்கும் என்பதை சொரணையுள்ள தமிழர்கள் சிந்திக்க வேண்டும்!
அது மட்டுமல்ல,
Therefore I urge the Union Home Monister Mr. Rajnath Singh to (1) invoke Article 356 of the Constitution and (2) put the Legislative Assembly in suspended animation (3) impose the AFSPA in all southern districts as well as Chennai for a period of six months till Ms Jayalalitha is able to attend office. The Apollo hospital has expressly made clear in the Press Release that she is required to remain in hospital for a futher period. Hence the pre-emptive action by the Union Government is not only constitutional but also urgent.
என்கிறார் சுப்ரமணியசாமி.
இந்த ஆட்களையெல்லாம் உலவவிட்டு வேடிக்கைப் பார்க்கும் மத்திய மோடி அரசுக்கும்,
சுப்பிரமணியசாமிக்கும் தமிழினம் சரியான பாடம் கற்பிக்கும்! கற்பிக்க வேண்டும்!
அ.தி.மு.க. அமைச்சர்களும் தொண்டர்களும் எப்படிப் பதில் தரப் போகிறார்கள் பார்ப்போம்!
- மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment