அரசியல்

Sunday, March 31, 2013

அண்டவெளி நுட்பங்கள் ஆன்மீகம் அறிந்தவையா? - மஞ்சை வசந்தன்


'கடவுள் துகள்'' - ஒரு மீள் பார்வை என்ற தலைப்பில் ''தினமணி'' நாளேட்டில் பொன்னி செல்வநாதன் என்பவர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு

''தினமணி'' 'தினமலர்' ''துக்ளக்'' என்ற மூன்றும் முட்டுத்தூக்கி ஆன்மீகத்தை, ஆரியத்தை நிலை நிறுத்த தொடர்ந்து முயன்று வருகின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அதிகமாகவும் தீவிரங்காட்டுகின்றன.காரணம், கடந்தசில ஆண்டுகளாக அறிவியல் தரும் அடியால் ஆன்மீகத்தின் அடிப் படை தகர்ந்து நொறுங்கியுள்ளது.

ஆன்மீகத்தை வைத்தே ஆதிக்கம் செலுத்தும் ஆரியக் கூட்டம், சரியும் ஆன்மீக நம்பிக்கைகளையும்,ஆரியர் ஆதிக்கத்தையும் சரிசெய்ய முயல் கின்றன. அதன் அடிப்படையில் மேற்கொண்ட மூன்று பத்திரிகையின் ஆசிரியர்களும் உள்ளார்ந்த உடன்பாட்டின் அடிப்படையில் மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் முலாம்பூசியும், ஆன்மீக உளறல் களுக்கெல்லாம் அறிவியல் விளக்கம் கொடுத்தும் மக்களின் மதியை மயக்கி மடையராக்க தங்கள் பத்திரி கைகளைப் பயன்படுத்துகின்றனர்.

அதிலும் தந்தை பெரியாரின் சிந்தனைத் தாக்கத்தைச் சிதைப் பதிலும், தமிழர் எழுச்சியின் வேகத்தைக் தடுப்பதிலும், திராவிடர் உணர்வாளர்களைக் கேவலமாகவும், கேலியாகவும் எழுதுவதிலும், மக்களுக்கு அவர்கள் மீதுள்ள மதிப்பை, நம்பிக்கையை, நன்றியை, பற்றை குலைப்பதுடன், குறைப் பதிலும் அற்பத்தனமாக இறங்கு கின்றன. இதற்கு சில தமிழர்களை நிரந்தரமாகவே வைத்துள்ளனர். பழ. நெடுமாறன், பழ.கருப்பையா போன்றோரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

தினமலரும், துக்ளக்கும் வெளிப் படையாக தமிழர் எதிர்ப்பைக் காட்டும் நிலையில், தினமணி வைத்தியநாதன் அய்யர் தமிழ் வளர்க்கும் போர்வையில் தமிழையும் தமிழரையும் வீழ்த்த வியூகம் அமைத்து செயல்படுகின்றனர். பத்திரிகை விளம்பரத்திற்காக தமிழர் சிலரும் அதற்குத் தங்களையும் அறியாமல் துணை போகின்றனர்.

வைத்திய நாத அய்யர் தமிழுக் காகச் செய்யும் செயலைச் செய்ய வேறு எந்தத் தமிழருக்கும் தகுதி யில்லையா,? திறைமையில்லையா?

ஆற்றல் இல்லையா? அறிவு இல்லையா? செல்வாக்கு இல்லையா? அறிமுகம் இல்லையா? பின் எதற்காக அவர்பின்னே அணிவகுக்கின்றனர்.

ஆரிய பார்ப்பனர்கள் அடுத்த வர்க்குரியதில் ஆர்வம் காட்டுகிறார்கள்  என்றால், அது அய்யப்படுவதற்குரியது (Vested Interest) என்பதை அறிஞர்பெருமக்கள் மறந்துவிடக்கூடாது. குழந் தையைக் கடத்துபவன் மிட்டாய் கொடுப்பது போலத்தான் இது.

தமிழர்களின் அமைப்பு களை ஒன்று சேர்க்க ஆரிய பசையா தேவை? சிந்திக்க வேண்டுகிறோம். வைத்திய நாத அய்யர் தமிழர் ஆட்சி இழக்க ஆரியப் பெண்ணே ஆட்சியமைக்க என்ன பாடுபட்டார் என்பது அறிஞர் பெருமக்கள் அறியாததா? தமிழுக்குப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொண்டு ஆரியத்தை ஆட்சிபீடத்தில் ஏற்றி வீரியத்துடன் தமிழை அழிக்கும் செயல்அல்லவா தற்போது நடைபெறுகிறது.

பாடுபட்டு பெற்ற ''செம்மொழி' என்ற அடையாளம் அகற்றப்படு கிறது. தமிழ்வளர்ச்சி முடக்கப்படு கிறது. தமிழ்ப் பல்கலைக்கழக நிலம் பறிக்கப்படுகிறது. தமிழ் வழிக்கல்வி ஒடுக்கப்பட்டு, வணிக நோக்கில்  நடத்தப்படும் ஆங்கில வழிக் கல்விக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு களெல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. தமிழ்ப் புத் தாண்டு ஆரிய ஆண்டாக மாற்றப் பட்டுள்ளது. தமிழர் நலன் காக்கும் சேது சமுத்திர திட்டம் ஆரியப் பார்வையில் எதிர்க்கப்படுகிறது. இப்படி எத்தனையோ... செயலலிதா ஆட்சியின் எந்தச் சீர்க்கேட்டை யாவது இவர்கள் கண்டித்தது உண்டா? பரிதிமாற்கலைஞரை நினைத்துக் கொண்டு வைத்தியநாத அய்யரைப் பார்க்கக் கூடாது! அவர் உளச்சான்று உடையவர் இவரோ ஆர்.எஸ். எஸ் அமைப்பில் கூர்தீட் டப்பட்ட ஆரிய அமைப்பின் கூரிய ஆயுதம். விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ் வளவும் சொல்கிறோம்.இரண்டு மணிநேர மின்வெட்டைக் கண்டித்து எகிறிக்குதித்தவர்கள் பத்து மணி நேர மின்வெட்டில் பதுங்கிவிட்டார்கள்.

இந்த இருட்டில் ஆரிய பாசம் பளிச்சென்று தெரிகிறதே! அண்டம் பற்றி எழுத வந்து, இதையெல்லாம் எழுதுவது தேவை கருதியே, இக்கட்டுரை வெளியிடப்படுவதன் நோக்கம் அறிய இவை உதவும் இனி கட்டுரைக்கு வருவோம். இக்கட்டுரை ஆரியத்தின் அறிவுத்திறனை உயர்த் திக் கூட்டவும், முடக்குவியலாய் உள்ள வேத, சாத்திரங்களை அறிவுக் கருவூலமாய் அடையாளங்காட்டவும், அதன்வழி தங்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவும் வெளியிடப்பட்டது ஆகும்.

கடவுள் நம்பிக்கையைத் தகர்க்கும் அறிவியல் கண்டுபிடிப்பு எதுநிகழ்த் தப்பட்டாலும், உடனே அதைத் தடுத்து, கடவுள் நம்பிக்கையை நிலை நிறுத்த ஏதாவது கற்பனைச் செய்திகளை, வெளியிட்டு மக்கள் மதியை மழுங்கச் செய்து, தங்கள் பிடியில் இருக்கும் வகையில் மூளைச் சலவை செய்துவிடுவது ஆரியத்தின் வழக்கம். குளோனிங்முறையில் ஆட்டுக்குட்டி உருவாக்கப்பட்ட அன்றே கடவுளுக்குக் ''கருமாதி'' முடிந்து விட்டது. பத்தாவது கோள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதே சோதிடத்-திற்கு சமாதி கட்டப்பட்டுவிட்டது. அதேபோல், அண்ட உருவாக்கத் துகள் கண்டுபிடிக்கபட்டபோதே கடவுள் படைத்த உலகு என்ற நம்பிக்கை கலகலத்துப் போயிற்று.

சுனாமியும், நிலநடுக்கமும் ஒரு நிமிட நேரத்தில் இலட்சக்கணக்கான உயிர்களை எப்போது அழித்தனவோ, அப்போதே கடவுளும் இல்லை சோதிடமும் பொய் என்பது உறுதி செய்யப் பட்டது. இயற்கை நிகழ்வு என்பதால் இப்படி நடக்கிறது. கடவுள் கட்டுப்பாட்டில் இவ்வுலகு இருந்தால் இப்படியெல்லாம் நடக்காது என்று மக்கள் எண்ணி கடவுளை கைவிட் டனர். அப்போது கூட இவை கட வுள் சீற்றம், கடவுள் தண்டிக்கிறார் என்று ஆரிய பத்திரிகைகள், ஊட கங்கள் செய்தி பரப்பின. கடவுள் நம்பிக்கை தகர்க்கப்படும் போதெல்லாம் கற்பனைக் கதைகளை கூறிமக்களை மாற்ற முயலும் வழக்கப்படியே இக்கட்டுரை இப் போது தினமணியில் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த அண்டம் (பிரபஞ்சம்) கடவுளால் படைக்கப் பட்டதல்ல அது இயற்கையாய் இருப்பது. இதை உறுதி செய்ய, நடத்தப்பட்ட ஆய்வே அண்டத்துகள் ஆய்வு. கடவுளை மறுக்கும் இந்த ஆய்வை கடவுளை யும் சாத்திரத்தையும் காப்பாற்ற பயன் படுத்தியுள்ளார் தினமணி ஆசிரியர்.

ஒவ்வொரு மனிதனும் ஒருகருத்தை ஊன்றி உணர்ந்தாலே, கடவுள் நம்பிக்கைக்குக் காரணமில் லாமலே போகும்.

உலகில் எந்தவொன்றையும் ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. உலகில் உள்ளவை எப்போதும் உள்ளவை Ever Existing.

அவற்றில் மாற்றங்கள் மட் டுமே அவ்வப்போது நிகழும் என்பவை உறுதிசெய்யப்பட்ட அறிவியல் உண்மைகள். அப்படியிருக்க கடவுளுக்கு இதில் என்ன வேலை?  இந்த அண்டத்தை கடவுள் உரு வாக்கினார் என்றால் அக் கடவுள் எங்கிருந்து வந்தது? எங்கிருக்கிறது? கடவுள் இவ் வண்டத்தை எந்தப் பொருளைக் கொண்டு உருவாக்கியது? அப் பொருள்கள் எங்கிருந்து கடவுளுக்குக் கிடைத்தன?

ஏற்கனவே இருந்த பொருட் களைக்கொண்டு உருவாக்கினாரா? அல்லது கடவுள் நினைத்த மாத்திர திலேயே இவ்விடத்தில் உள்ளவை வந்தனவா? நினைத்த மாத்திரத்தில் வந்தனவென்றால் சூரியன், நிலவு, நிலம், எல்லாம் கடவுள் எண்ணிய வுடன் வந்தன என்று பொருள்.

எண்ணியவுடன் பொருள்வருமா? வருமென்றால் ஏன் புதியவற்றை கடவுள் இப்போது உருவாக்க வில்லை? மாறாக ஏன் முன்னர் இருந் தவை இப்போது இல்லாமல் போயின? எடுத்துக்காட்டாக அக்காலத்தி லிருந்த ''டைனோசர்'' இக்காலத்தில் இல்லை. இப்படி எத்தனையோ சொல்லலாம்.கடவுள் படைப்பு என்றால் மீண்டும் இவற்றைக் கடவுள் ஏன்படைக்க வில்லை? எனவே, எப்படிச் சிந்தித் தாலும் அண்டம் என்பது (பிரபஞ்சம் என்பது) இயற்கையாய் இருப்பது, அது கடவுள் படைப்பல்ல என்பது தக்க அளவிலே உறுதி செய்யப்படு கிறது. இப்பூமி சூரியனிலிருந்து சிதறியது என்பதை எரிமலை வெடிப்பு உறுதி செய்கிறது. உயிரி னங்கள் ஒருசெல் உயிரி உருவாகி அதிலிருந்து பரிணாமம் தொடர்ந்து கொண்டேயிருக்கும் எனவே, எதுவும் கடவுள் செயல் அல்ல, கடவுளும் இல்லை என்பதை அறிவியல் உறுதி செய்துள்ளது.

அதை இறுதியாக உறுதிசெய்ய நடத்தப்பட்ட சோதனை ''அண்டத் துகள் ஆய்வு'' நியூட்ரான், புரோட் டான், எலக்ட்ரான் அணுக்கள் ஒன்று சேர்ந்து இணைய காரணமான துகளைக் கண்டறிந்தால் அண்டம் அமைந்த அடிப்படையை அறியலாம் என்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வு இது . அதன்படி இந்த ஆய்வில் வெற்றி கிட்டி 'இவ்வுலகு கடவுள் படைப்பல்ல' என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடவுள் நம்பிக்கை பெரும்பாலும் போய்விட்டது.

2 comments:

  1. கடவுளை நம்பவில்லையெனில் , அவர் இல்லையென நிரூபியுங்கள் அறிவியல் மூலமாக...

    எதன் அடிப்படையில் கடவுள் இல்லை என்கிறீங்க?

    அப்போ, இந்த உலகம் எப்படி வந்தது?
    உயிர்கள் எப்படி வந்தது.?

    என அறிவியலில் இதுவரையில் நிரூபிக்கபட்டுள்ளதா.?

    இல்லையே! இதுவரை இதை கண்டுபிடிககவில்லையே!

    அப்புறம் எப்படி கடவுள் இல்லை என்கிறீங்க! இதை கண்டுபிடிக்காதவரை இதை கூற உங்களுக்கும் உரிமையில்லை

    ReplyDelete
  2. நாத்தீகவாதிகளே பதிலளியுங்கள் ....

    இறைவன் இந்த உலகை உருவாக்கவில்லை, உயிர்களையும் உருவாக்கவில்லை, இந்த உலகம் தானாக வந்ததாக கூறும் நாத்திகவாதிகள் கூறும்....

    * பெரு-வெடிப்பு கொள்கை,
    * ஹிக்ஸ் போஸான் (கடவுள் துகள்) கொள்கை,
    * டார்வின் பரிணாம கொள்கை,
    * மில்லரின் கொள்கைகள் ....

    இப்படி பல கொள்கைகளை சொல்றாங்க ....

    இவைகள் கொள்கைகள் தன ஒழிய விதிகள் அல்ல. இரண்டிற்கும் பெரும் வித்தியாசங்கள் உள்ளன.

    ஆனால், இந்த கொள்கைகளையே நிரூபித்த விதிகளாக நம்பும் நாத்திகவாதிகளை முட்டாள் என கூறலாமே !

    எந்தவொரு விஞ்ஞான ஆராய்ச்சியாக இருந்தாலும், அது முதலில் கொள்கை வடிவில் உருவாக்கப்பட்டு, அதன் பின்னர் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே அந்த விஞ்ஞானம் விஞ்ஞானமாக ஏற்கப்படும். இல்லாவிடில், அது வெறும் கற்பனையாகவே தொடர்ந்து இருக்கும்.

    உதாரணமாக, நியூட்டனின் இயற்பியல் கண்டுபிடிப்புகள் முதலில் கொள்கைகளாக வடிக்கப்பட்டு, பின்பு ஆராய்ச்சிகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டு, விதிகளாக மாற்றம் பெற்றன. கொள்கைகள் விதிகளாக மாறிய பின்னரே (அதாவது நிரூபிக்கப்பட்ட பின்னரே) அவை அறிவியலாக ஏற்கப்படுகின்றன. நிரூபிக்கப்படாவிடில் அவை வெறும் கொள்கைகளாகவே இருக்கின்றன.

    ஒருவர் ஒரு கொள்கையைக் கூறலாம், மற்றவர் மற்றொரு கொள்கையைக் கூறலாம், கொள்கை என்பது ஓர் அபிப்பிராயமே தவிர நிதர்சனமான உண்மையல்ல.

    எனவே, இப்படி நிரூபிக்கப்படாத உலகம்,உயிர்கள் உருவாக்கத்தை வைத்து இறைவன் இல்லை என வாதாடும் நாத்திகவாதிகள் எப்போது இந்த உண்மைகளை அறியப்போகிறார்கள் ?

    இறைவன் என்பதை இல்லையென் நீங்களே நான் கேட்ட கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் நிரூபிக்கலாமே ! உலகம், உயிர்கள் தானாகவே வந்தது என்பதை அறிவியல் நிரூபித்துவிட்டாலே போதுமே! இறைவன் இல்லையா ஆகிவிடுகிறதே ! அப்புறம் எங்களுக்கு வேலையே இல்லையே !

    இப்படி நீங்கள் நிரூபித்துவிட்டால் நாங்களும் உங்கள் கொள்கைக்கே வந்துவிடுவோம் அல்லவா ?

    ReplyDelete